ஆவடியில் மின்சார ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த ரயில்வே ஊழியர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


ஆவடியில் மின்சார ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த ரயில்வே ஊழியர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு கணேஷ் நகரை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் சென்னை எழும்பூர் ரயில்வேயில் சிக்னல் டிசைனராக பணி புரிந்து வந்தார்.

இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு வழக்கமாக முத்துகிருஷ்ணன் வேலையை முடித்துவிட்டு ஆவடியில் இருந்து வேப்பம்பட்டு செல்வதற்காக அரக்கோணம் நோக்கி வந்த புறநகர் மின்சார ரயிலில் ஏற முயன்றபோது தவறி பிளாட்பாரத்தில் விழுந்துள்ளார்.

இதில் முத்துகிருஷ்ணன் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றநிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக ஆவடி ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The man who failed while trying to board the train was killed in avadi


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->