காட்டி கொடுத்த வழக்கறிஞர்..ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ. கைது! - Seithipunal
Seithipunal


ஆள் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி MLA கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்துவரும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ. வின் வீடு கே.வி. குப்பம் பூந்தமல்லியில் உள்ளது. இன்று மதியம் திடீரென திருவள்ளூர் டி.எஸ்.பி. தமிழரசி தலைமையில் போலீசார் ஜெகன் மூர்த்தி வீட்டிற்கு சென்றனர்.இதனால் அங்கு பரபரப்பான சூழல் எற்பட்டது.  இதையடுத்து இந்த தகவல் அறிந்து புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் அவரது வீட்டின் முன் குவிந்ததனால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ஆள் கடத்தல் வழக்கில் ஜெகன் மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.அப்போது அவரை கைது செய்து அழைத்துச் செல்ல முடியாத வகையில் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களையும் போலீசார் கைது செய்து வருகின்றனர்.

தேனியைச் சேர்ந்த பெண் திருவாலங்காட்டைச் சேர்ந்த இனைஞரை காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணம் செய்துகொண்ட பெண்ணின் தந்தை, தனது மகளை கடத்தியதாக புகார் அளித்தது  தொடர்பாக வழக்கறிஞர் ஒருவரை கைது செய்துபோலீசார் விசாரணை நடத்தினர்.அந்த வழக்கறிஞர், ஜெகன் மூர்த்தி கூறியதன் பேரின் அந்த பெண்ணை கடத்தியதாக வாக்குமூலம் அளித்ததன்அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The lawyer who provided evidence Jagan Moorthy MLA arrested


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?


செய்திகள்



Seithipunal
--> -->