திருப்பத்தூர் அருகே பரிதாபம்.! மனைவி கதவை திறக்காததால் வீட்டின் சுவர் ஏறிய கணவர் பலி.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் மனைவி கதவைத் திறக்காததால் வீட்டின் சுவர் ஏறிய கணவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் தென்னரசு(30). இவர் நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது அவரது மனைவி நன்கு தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் தென்னரசு கதவைத் திறக்க காலின்பெல்லை அழுத்தியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவரது மனைவி கதவை திறக்கவில்லை. மேலும் அவரது மனைவிக்கு போன் செய்தபோதும் அவர் எடுக்கவில்லை.

இதனால் தென்னரசு அவரது வீட்டிற்கு செல்ல பின்புற சுவர் வழியாக ஏற முயன்றுள்ளார். அப்பொழுது திடீரென தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த தென்னரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து கண் விழித்த அவரது மனைவி கணவர் வரவில்லை என்பதால் உறவினர் ஒருவருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து வீட்டிற்கு வந்த உறவினர் தென்னரசுக்கு போன் செய்தபோது வீட்டின் பின்புறத்தில் இருந்து செல்போன் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து கீழே கிடந்த தென்னரசை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர் தென்னரசு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், தென்னரசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The husband climbed the wall of the house and fell and died in tirupattur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->