விரைவில்.. கர்ப்பிணிகளுக்கு உதவிதொகை... சுகாதாரத் துறை அமைச்சர் உறுதி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் பேறு கால நிதி உதவி  தாமதமாகி உள்ளது குறித்து பேசியிருக்கிறார் சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்.

தமிழகத்தில் 3.75  லட்சம் கர்ப்பிணிப் பெண்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய  கர்ப்பகால நிதி உதவி தாமதமாகி இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசிடம் பேசியிருப்பதாகவும் விரைவிலேயே நிதியுதவி கிடைத்தவுடன் அனைவருக்கும் வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறார் சுகாதாரத் துறை அமைச்சர்.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை செயலாளருக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் விரைவிலேயே நிதியுதவி கிடைப்பதற்கு ஏற்பாடு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். விரைவிலேயே இந்த உதவி கிடைப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருவதாக உறுதியளித்தார்.

முதல் இரண்டு குழந்தைகளை பெறும் ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப கால நிதி உதவியாக தமிழக அரசு 12000 ரூபாய் முதல் 18000 ரூபாய் வரை  வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Health Minister confirmed that the pregnancy allowance will come soon


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->