எழுத்துப் பிழை சரிசெய்ய முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய சிறுமி! - Seithipunal
Seithipunal


கோவை பீளமேடு பகுதியில் வசிக்கும் பழனிச்சாமி, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கணக்கு உதவியாளராக பணியாற்றி வருகிறார். அவரின் மனைவி கிருத்திகா, அவர்களது 10 வயது மகள் பிரணவிகா தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகின்றார். 

சமீபத்தில், பழனிச்சாமி தனது குடும்பத்துடன் கோவையில் உள்ள ஒரு பிரபல மாலில் திரைப்படம் காண சென்றார். திரையரங்கில் படம் தொடங்குவதற்கு முன், புகைப்பிடித்தல் தொடர்பான ஒரு விழிப்புணர்வு விளம்பரம் ஒளிபரப்பப்பட்டது. அதில் "புகைப்பிடித்தால் புற்றுநோய் ஏற்படும் மற்றும் உயிரைக் கொள்ளும்" என்ற வாசகத்தை பார்த்த பிரணவிகா, "கொள்ளும்" என்பதற்குப் பதிலாக "கொல்லும்" என்று இருக்க வேண்டும் என தனது தந்தையிடம் கூறினார்.

சிறுமியின் கவனிப்பின் மூலம், திரையரங்கில் இந்த வாசகத்தில் பிழை இருப்பதை அவர் சுட்டிக்காட்டி, திரையரங்கு மேலாளரிடம் அதை சரிசெய்ய கோரியுள்ளார். மேலாளர், இந்த விளம்பரக் காப்பி மும்பையில் இருந்து வந்ததால் மாற்றம் செய்ய இயலாது என்று விளக்கம் அளித்தார். 

இதனை உறுதியுடன் எடுத்த பிரணவிகா, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எழுத்துப்பிழையை சரி செய்ய வேண்டுமென கடிதம் எழுதினார். தனது மொழிக்கு கவனம் செலுத்தும் சிறுமியின் இந்த செயல்கள், தமிழ் மொழியின் நுட்பங்களைப் பரிந்துரைக்கும் ஒரு சிறந்த முயற்சியாக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The girl wrote a letter to the Chief Minister to correct the typo


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->