தந்தையுடன் நடைபயிற்சி மேற்கொண்ட மகள்.. கார் மோதி பரிதாபமாக உயிரிழப்பு..! - Seithipunal
Seithipunal


நடைபயிற்சி சென்றவர்கள் மீது கார் மோதியதில்   சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் , ஆறுமுகநேரி பகுதயில் வசித்து வருபவர் சுப்பிரமணியம் மகேஷ் . இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவியும் மிருதுளா என்ற மனைவியும் உள்ளனர். சுப்பிரமணியம் மகேஷ் காவலராக பணியாற்றி வருகிறார்.

தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வதை சுப்பிரமணியம் மகேஷ் வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், தனது மகளுடன் நடைபயிற்சி மேற்கொண்ட அவர்கள் மீது கார் ஒன்று மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர்களை அங்குள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மிருதுளா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

படுகாயமடைந்த சுப்பிரமணியம் மகேஷ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The girl who was walking with her father was killed in a car Accident


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->