விருதுநகரில் பரபரப்பு.! போலீசார் மீது மிளகாய் பொடி தூவி கைதிகளை கொல்ல முயன்ற கும்பல்..! - Seithipunal
Seithipunal


விருதுநகரில் போலீசார் மீது மிளகாய் பொடி தூவி கைதிகளை கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பூண்டு வியாபாரி சின்னதம்பி. இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த குணா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்பு இருந்ததால் இவரை குணாவின் ஆதரவாளர்கள் வெட்டி கொன்றனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேரை கைது செய்தனர்.

இதையடுத்து ஆறு பேரில், இரண்டு பேர் விருதுநகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து இவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால், போலீசார் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மருத்துவமனைக்குள் புகுந்த எட்டு பேர் கொண்ட கும்பல் போலீஸ்காரர்கள் மீது மிளகாய் பொடி தூவி கைதிகளான யுவராஜ் மற்றும் விக்னேஸ்வரனை வெட்டி கொல்ல முயன்றுள்ளனர்.

ஆனால் சுதாரித்துக்கொண்ட போலீசார் கைதிகளை காப்பாற்றினர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வேடப்பட்டி பகுதியை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய மற்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The gang tried to kill the prisoners by throwing chilli powder on the police in virudhunagar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->