மகளின் கண்முன்னே தந்தைக்கு நிகழ்ந்த விபரீதம்.. கன்னியாகுமரி அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


மகனின் கண் முன்னே தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் ரத்தினராஜ். இவருக்கு ஜமீலா என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், அவரின் உறவினர் திருமணத்திற்கு செல்வதற்காக அவரும் அவரது மகளும் இரணியல் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர்.

இதனை அடுத்து, இடத்தை நாகர்கோவிலில் இருந்து மங்களூர் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது. அவரின் மகள் அன்பு மரியாதை ரயிலில் ஏறி விட்டார் பின்பு அவர்கள் கொண்டு வந்த உடைமைகளை பிளாட்பாரத்தில் இருந்தபடியே ஏற்றியிருக்கிறார்.

ரயில் கிளம்பியதால் ரயிலில் ஏற முயற்சித்தவர் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே மீட்பு படையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கண்முன்னே தந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The father died after falling off the train in front of his daughter


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->