போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்.. முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்!
The drug abuse awareness rally was inaugurated by Chief Minister Rangasamy
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி காவல்துறை சார்பில் கடற்கரை சாலை, காந்தி திடலில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை துணைநிலை ஆளுநர் கைலாசநாதன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
ஊர்வலத்தில் மாணவர்கள், போலீசார், சமூக நல அமைப்புகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று போதைப்பொருள் ஒழிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் பதாகைகள் மற்றும் விளக்கப் பதிவுகளுடன் பேரணியாகப் பங்கேற்றனர்.

மண்ணாடிப்பட்டு தொகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் நமச்சிவாயம்.
முன்னதாக அமைச்சர் நமச்சிவாயம், மண்ணாடிப்பட்டு சட்டமன்ற தொகுதியில் உள்ள திருக்கனூர் பகுதியில் தனது இல்லத்தில் இன்று பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார்.இந்நிகழ்வில், பொதுமக்கள் நேரில் வந்து தங்களின் புகார்கள், கோரிக்கைகள், பிரச்சனைகள் மற்றும் சமூக நலத் தேவைகளை அமைச்சரிடம் முன்வைத்தனர். ஒவ்வொரு பிரச்சனையும் கேட்டறிந்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை உடனடியாக அழைத்து பேசினார். சில பிரச்சனைகளுக்கு நிகழ்விடத்திலேயே தீர்வுகள் வழங்கப்பட்டன.
இது, மண்ணாடிப்பட்டு தொகுதியில் நிர்வாகம் மக்கள் நலனில் எவ்வளவு முழுமையாக ஈடுபட்டு செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. அமைச்சரின் நேரடி அணுகுமுறையும், செயல் திட்டமிடலும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
English Summary
The drug abuse awareness rally was inaugurated by Chief Minister Rangasamy