திமுக அரசு 5ம் ஆண்டு துவக்கம், நலத்திட்ட உதவிகள் வழங்கிய மேயர் ஜெகன்!
The DMK government begins its 5th year with Mayor Jagan providing welfare scheme assistance
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 2021ம் ஆண்டு மே ஏழாம் தேதி தமிழக முதலமைச்சராக பதவி ஏற்று நான்கு ஆண்டுகள் நிறைவு செய்து, ஐந்தாம் ஆண்டு துவக்கம் தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.
தூத்துக்குடியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி புதிய பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து அங்கிருந்த பொது மக்களுக்கு லட்டு வழங்கினார். பின்னர் குறவர் இனமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது தங்களுக்கு வீடு விரைவாக வழங்க வேண்டும் என்று குறவர் மக்கள் கோரிக்கை வைத்தனர். ஏற்கனவே பேரூரணி அருகே குறவர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது உங்களுக்கு அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் உங்களுக்கு வீடு வழங்கப்படும் நீங்கள் வீட்டிலிருந்து நேராக எங்கு தொழில் செய்ய செல்கிறீர்களோ அங்கு தொழில் செய்துவிட்டு மழை வெயிலில் பாதிக்கப்படாமல் வீட்டுக்கு சென்று தங்க வேண்டும் என்று குறவர்களிடம் கூறினார்.
அப்போது தங்களுக்கு இன்று சாப்பாடு மற்றும் உதவிகள் செய்ய வேண்டும் என்று குறவர்கள் கோரிக்கை வைத்தனர். மேயர் அங்கிருந்த குறவர் மக்கள் அனைவருக்கும் அரிசி வழங்க உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அதுபோல உணவு வழங்குவதற்கான ஏற்பாடும் செய்து கொடுத்தார். குறவர்கள் மக்கள் மேயர் ஜெகன் பெரியசாமிக்கு நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் திமுக மாநகர துணைச் செயலாளர் கீதா முருகேசன், பகுதிசெயலாளர் சுரேஷ்குமார், வட்டச் செயலாளர்கள் ரவீந்திரன், முனியசாமி, ராஜாமணி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் பெரியசாமி, பகுதி சபா உறுப்பினர் சிவசுந்தா், வியாபாாிகள் சங்க நிர்வாகி ராஜ்குமாா், மற்றும் மந்திரம், ஜெயபாண்டி, பாலசுப்பிரமணி, குமாா், பாலா, சுடலை முத்து, ரவி, உள்பட பலா் கலந்து கொண்டனர்.
English Summary
The DMK government begins its 5th year with Mayor Jagan providing welfare scheme assistance