உருது ஆசிரியர் நியமன விவகாரம் ..உயர்நீதி மன்ற தீர்ப்புக்கு வக்பு சொத்துக்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கமிட்டி வரவேற்பு! - Seithipunal
Seithipunal


 சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் மைல்கல் என்றும் இந்த சிறப்பான தீர்ப்பை வரவேற்கப்படுகிறது என்று தமிழ்நாடு& புதுச்சேரி வக்பு சொத்துக்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கமிட்டி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு& புதுச்சேரி வக்பு சொத்துக்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கமிட்டியின் மாநில செயலாளர் ஷேக்நூர்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள "மதராசா-இ-அசாம்" பள்ளியில் உருது ஆசிரியர் ஹாஜிராவின் நியமனம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் (28.06.2025) தள்ளுபடி செய்து, அரசுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு கட்டாயமில்லை என ஏற்கனவே இரு முறை தீர்ப்பளிக்கப்பட்டிருந்தும், அரசு மீண்டும் மேல்முறையீடு செய்தது நியாயமற்றது என நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சுரேந்தர் ஆகியோர் தங்கள் தீர்ப்பில் கண்டித்துள்ளனர்.

மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வைக் கட்டாயப்படுத்துவது, சிறுபான்மை நிறுவனங்களின் மொழி மற்றும் கலாசார அடையாளங்களைப் பாதுகாக்கும் அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாக உள்ளதாக நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கிறேன்

இலக்கிய வளம் மிக்க உருது மொழியை அழிவிலிருந்து காக்கும் வகையில், உருது பள்ளிகளை மேம்படுத்தவும், ஆசிரியர் பணியிடங்களை விரைவாக நிரப்பவும்  தொடர்ந்து உருது மொழி கலாச்சாரத்தை பாதுகாக்கும் முக்கிய கடமை அரசுக்கு உள்ளதால்  சென்னை உயர்நீதிமன்றம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது. எனவே, இந்த விசயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் நீதிமன்ற உத்தரவினை செயல்படுத்த முன்வர வேண்டும். இந்த விவகாரத்தில் உயர்நிதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, இந்திய அரசியலமைப்பின் கீழ் சிறுபான்மை உரிமைகளைப் பாதுகாக்கும் முக்கிய மைல்கல்லாக அமைந்து, மதச்சார்பின்மை மற்றும் பன்முகத்தன்மையை உறுதிப்படுத்துகிறது. மேலும், சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் தமிழகத்தில் உள்ள உருது துவக்கப் பள்ளியில் ஆசிரியர்களை உடனடியாக நியமனம் செய்து நீதியை நிலைநாட்ட , தமிழக அரசு இந்த நீதிமன்றத் தீர்ப்பை வழிகாட்டியாகக் கொண்டு, சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், உருது ஆசிரியர் நியமனங்களை உடனடியாக செய்ய வேண்டுமென தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The appointment of the Urdu teacher Welcome to the Assets Protection and Monitoring Committee for the Supreme Court ruling


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->