தஞ்சாவூரில் பெரும் சோகம்.. அறுந்துகிடந்த மின்சார கம்பியை மிதித்த சகோதரர்கள் பலி.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கூர் கல்யாணஓடை கிராமத்தை சார்ந்தவர் மாரியப்பன் (வயது 38). இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 31). இவர்கள் இருவருக்கும் தினேஷ் என்ற 12 வயது மகனும், கவுதம் என்ற 10 வயது மகனும் உள்ளனர். 

இவர்கள் இருவரும் அதே பகுதியில் விளையாடிக்கொண்டு இருந்த நிலையில், மறவக்காடு வாய்க்கால் பகுதி வழியாக நடந்து சென்று கொண்டு இருந்துள்ளனர். இதன்போது, அப்பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த இருவரின் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. 

இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்து சென்ற பெற்றோர், பிள்ளைகளின் உடலைக்கண்டு கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

இந்த விஷயம் தொடர்பாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கையில், " மின்சார கம்பி அறுந்தது தொடர்பாக மின்வாரிய ஊழியர்களுக்கு முன்னதாகவே தகவல் அளித்திருந்தும், அலட்சியத்தால் ஊழியர்கள் மின்சாரத்தை துண்டிக்காமல் விட்டதால், சிறுவர்கள் பலியாகியுள்ளார்கள் " என்று குற்றம் சாட்டியுள்ளனர்.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur child brothers death 15 Jan 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->