தாம்பரம் : பிரபல நகைக்கடையில் கொள்ளை.. வடமாநில சிறுவர்கள் 3 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


சேலையூர் வேளச்சேரி சாலையில் உள்ள ப்ளூ ஸ்டோன் நகைக்கடையில் கொள்ளையடித்த வடமாநில சிறுவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாம்பரம் அருகே சேலையூர் - வேளச்சேரி சாலையில் உள்ள ப்ளூ ஸ்டோன் பிரபல நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான வைரம், தங்கம் நகைகள் நேற்று இரவு கொள்ளையடிக்கப்பட்டது.

மாடி வழியாக வந்த கொள்ளையர்கள் லிப்டில் இறங்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். இதில் கடையில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த அனைத்து நகைகளையும் திருடியுள்ளனர். மேலும் லாக்கரை திறக்க முயற்சி செய்தபோது எச்சரிக்கை அலாரம் அடித்ததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கைரேகை மற்றும் தடவியல் நிபுணர்கள் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வட மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட வாலிபர் நகைக்கடைக்கு அருகில் உள்ள பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கைது செய்த வாலிபரை சேலையூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 3 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.மேலும், அவர்களிடமிருந்து 1.5 கோடி மதிப்புள்ள தங்க வைர நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thambaram robbery at Blue stone jewellery shop 3 assam peoples arrested


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->