'பதவி உயர்வு பெற்ற பின்பு டெட் தேர்வு தேர்ச்சி; முந்தைய அரசின் 'அரசாணை 243'ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும்'. முதல்வர் விஜய்க்கு ஆசிரியர் சங்கம் கோரிக்கை..! - Seithipunal
Seithipunal


''90 சதவீதம் பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வைப் பாதிக்கும் முந்தைய அரசின் 'அரசாணை 243'ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்த அரசாணையால் லஞ்ச முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது'' என தமிழக ஆரம் பப்பள்ளி ஆசிரியர்சங்கம் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.ஆர்.ஜான் வெஸ்லி, தலை வர்ப.ருக்மாங்கதன், பொருளாளர்சிவ சரவணன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியுள்ளதாவது;

''ஆசிரியர் பதவி உயர்வுக்குத் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பால் கடந்த 6 ஆண்டுகளாகப் பதவி உயர்வு முடங்கியுள்ளது. இதனால் பள்ளி நிர்வாகமும், மாணவர்களின் கற்றல்கற்பித்தல் பணிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே, முதல்வர் இதில் தனிக்கவனம் செலுத்தி, 'பதவி உயர்வு பெற்ற பின் குறிப்பிட்ட காலத்திற்குள் தகுதித் தேர்வு எழுத வேண்டும்' என்ற நிபந்தனையுடன் கொள்கை முடிவு எடுத்து பதவி உயர்வு வழங்க வேண்டும்.

மேலும், 90 சதவீதம் பெண் ஆசிரியர்களின் பதவிஉயர்வைப் பாதிக்கும் முந்தைய அரசின் 'அரசாணை 243'ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்த அரசாணையால் லஞ்ச முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விலேயே இக்கொள்கை முடிவை அறிவித்து, காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Teachers association urges Chief Minister Vijay to immediately revoke the previous governments Order 243


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->