சிவகங்கையில் அதிர்ச்சி: டியூஷன் படிக்க வந்த மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியையின் கணவர்..!
Teacher husband impregnates student came for tuition
வீட்டிற்கு டியூசன் படிக்கவந்த மாணவியை ஆசிரியரின் கணவர் கற்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதியிருந்த நிலையில், ஆசிரியை ஒருவரின் வீட்டிற்கு சென்று டியூசன் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த வீட்டில் ஆசிரியை இல்லாத நேரத்தில் மாணவிக்கு ஆசிரியையின் கணவரான 45 வயதுடைய ஆரோக்கியதாஸ் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆனால் இது குறித்து அவர் உறவினர்களிடம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், அந்த மாணவிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனால் குறித்த மாணவியை அவரது பெற்றோர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவியை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்ததில் மாணவி கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் மாணவியும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் இருந்து சிவகங்கை மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் மாணவியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது டியூசன் சென்ற இடத்தில ஆசிரியையின் கணவர் ஆரோக்கியதாஸ் தன்னிடம் தவறாக நடந்த விவரத்தை மாணவி தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் குழந்தைகள் நல அலுவலர்கள் புகார் அளித்துள்ளனர்.
புகாரையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியதாசை கைது செய்துள்ளார். அத்துடன், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Teacher husband impregnates student came for tuition