ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் ஒன்று : விடைக்குறிப்புக்கு ஆட்சேபனை தெரிவிக்க நாளை கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


ஆசிரியர் தேர்வு வாரியம் செய்திலக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது, "தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் ஒன்றுக்கான கணினி வழித்தேர்வுகள் கடந்த 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை நடத்தப்பட்டது. 

தற்போது அந்த கணினி வழித் தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த விடைக்குறிப்புகளுக்கு தேர்வர்கள் இணையவழியில் தங்களுடைய ஆட்சேபனையை தெரிவிக்கும்போது அதற்குரிய வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி மிக சரியான சான்றாவணங்களையும் இணைக்க வேண்டும். ஆவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படாது.

ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் நேற்றுமுன்தினம் பிற்பகல் முதல் நாளை பிற்பகல் 5.30 மணி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரியில் மட்டுமே தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்திட வேண்டும். 

மேலும் அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களின் ஆதாரங்களை மட்டுமே பதிவேற்ற வேண்டும். கையேடுகள் எல்லாம் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படாது. இதில் பாட வல்லுனர்களின் முடிவே இறுதியானது என்று அறிவிக்கப்படுகின்றது" என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Teacher Eligibility Test Paper One answer examinar objection last date


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->