கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.! அதிர்ச்சியில் மரணமடைந்த பள்ளி ஆசிரியர்.!
teacher death in heart attack
தமிழ்நாடு முழுவதும் பகுதி நேர ஆசிரியர்களாக ஆயிரக்கணக்கானோர அரசு பள்ளிகளில் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்கின்ற கோரிக்கை பல வருடங்களாகவே தமிழக அரசிடம் கேட்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்த மாத 15ம் தேதி வெளியான செய்தித்தாள்களில் அரசு பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்வதாக செய்தி வந்தது. இதை பார்த்து அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.
இதை தொடர்ந்து, தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நாட்றம்பள்ளியிலுள்ள, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பகுதிநேர ஆசிரியராக பணிபுரிந்து வந்த கார்த்திகேயன் வயது 54 ஆவர்.
இவர் கடந்த சனிக்கிழமையன்று பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை என்று கூறப்பட்டிருந்த நிலையில் தீடிரென பணி நிரந்தரம் செய்யப்படும் என்று வந்த அறிவிப்பால் இன்ப அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
இந்த சம்பவம் அந்த பள்ளி மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இறந்தவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.
English Summary
teacher death in heart attack