டியூஷன் வந்த மாணவியிடம் சில்மிஷம் - போக்சோவில் ஆசிரியர் கைது
Teacher arrested for molesting with girl who came for tuition in tirunelveli
திருநெல்வேலி மாவட்டத்தில் டியூஷன் வந்த மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் சிங்கம்பாறை பகுதியை சேர்ந்தவர் சகாயம் டெவின்ராஜ் (40). இவர் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். மேலும் வீட்டில் டியூஷன் எடுத்தும் வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் அனைத்து மாணவ-மாணவிகளும் டியூஷனுக்கு வந்துள்ளனர்.
அப்பொழுது டியூஷன் வந்த மாணவி ஒருவரிடம் ஆசிரியர் சகாயம் டெவின்ராஜ், சில்மிஷத்தில் ஈடுபட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மாணவி முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ஆசிரியர் சகாயம் டெவின்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Teacher arrested for molesting with girl who came for tuition in tirunelveli