மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தமிழ் ஆசிரியர்.. நையப்புடைத்து காவல்துறையில் ஒப்படைத்த உறவினர்கள்..! - Seithipunal
Seithipunal


மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தமிழ் ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் பாப்பிரெட்டி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள் பெற்று வருகின்றனர். தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்த நிலவோளி என்பவர் கடந்த ஆண்டு வகுப்பின் போது தன்னிடம் படித்த மாணவிகள் சிலரை ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து வைத்துள்ளார்.

இந்நிலையை அண்மையில் அந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவி ஒருவர் பெற்றோரிடம் தமிழ் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி அழுதுள்ளார். அவரின் செல்போனை பார்த்த போது ஆபாசமாக பேசியதும் சில ஆபாச வீடியோக்கள் அனுப்பியதும் தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பள்ளிக்கு வந்த தமிழ் ஆசிரியரின் செல்ஃபோனை வாங்கி பார்த்துள்ளனர்.

அதில் பல மாணவிகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வாட்ஸ் அப் சாட்டுகள் இருந்ததை கண்டு ஆத்திரமடைந்த அவர்கள் அவரை அடித்து உதைத்தனர். தகவகறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து ஆசிரியரை காப்பாற்றி காவல் துறை வாகனத்தில் ஏற்ற முயன்றனர்.

ஆனால் அங்கிருந்த அவர்கள் காவல்துறையினரையும் மீறி ஆசிரியரை சரமாரியாக தாக்கினர். இதனை அடுத்து தனியார் பள்ளி உரிய விளக்கம் தர வேண்டும் என கூறி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் சமாதானம் பேசி அவர்களை அங்கிருந்த அப்புறப்படுத்தினர்.

அதன்பின் ஆசிரியரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Teacher arrasted who sexually abused Student in karur


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->