தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு:
Tamilnadu rain update 07122023
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளிலும் நாளை மறுநாள் நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 25-26 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்ட பகுதிகளில் 11 சென்டிமீட்டர் மழையும் நாகப்பட்டினம் மாவட்ட பகுதிகளில் 1 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:

English Summary
Tamilnadu rain update 07122023