#Breaking: தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 21 ஆம் தேதி வரை நீட்டிப்பு.!!
Tamilnadu Govt Extend Lockdown till 14 June 2021
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு ஜூன் மாதம் 14 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 21 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த ஊரடங்கில் மக்களுக்கான தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாகவும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார். கடைகளுக்கு வரும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சானிடைசர் உபயோகம் செய்ய வேண்டும், கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் அறிவுறுத்தியுளளார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Tamilnadu Govt Extend Lockdown till 14 June 2021