சாதி பெருமை பேசிய சுரேஷ் ரெய்னா.?! சர்ச்சையை கிளப்பிய கிரிக்கெட் வீரர்.!  - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருந்தவர்தான் சுரேஷ் ரெய்னா. இவர் சென்னை அணிக்காக பல்வேறு வெற்றிகளை குவித்து இருக்கிறார். சமீபத்தில் சுரேஷ்ரெய்னா ஜாதி குறித்து பெருமையாக பேசி உள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

அவர் நான் இந்த ஜாதி என்பதால் எனக்கு சென்னை கலாச்சாரம் நன்றாக தெரியும் என்று தெரிவித்தது சர்ச்சையாகி இருக்கிறது .குறிப்பிட்ட ஜாதியை கூறி சென்னை மட்டுமல்லாமல் தமிழ் மக்களை தலைகுனிய வைத்து விட்டீர்கள் என்று சிலர் பொங்கி வருகின்றனர். 

இந்த முறை ஐபிஎஸ் கோப்பை இந்த அணிக்கு தான்.! ரெய்னா அதிரடி.! - Seithipunal

தற்போது தமிழகத்தில் இந்த ஜாதியின் பெயரால் தான் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்ற சூழலில் சுரேஷ்ரெய்னா இவ்வாறு பேசியது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அவர் மத்திய அரசுக்கு சாதகமாக செயல்படுகிறார் என்றும் சிலர் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். 

விஷயம் என்னவென்றால் சுரேஷ் ரெய்னா இதையெல்லாம் பிரிவினையாக எடுத்துக்கொள்ளாமல் பேசியுள்ளார். ஆனால், தங்களது சுயலாபத்திற்காக இதை சர்ச்சையாக்கி இருக்கின்றனர் நயவஞ்சகர்கள் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

suresh raina speech issue about castism


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->