அமெரிக்கர்களின் தனிநபர் விபரங்களை ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் வசிக்கும் ஒவ்வொருவரின் பள்ளி பதிவுகள், வருவாய் விவரங்கள் மற்றும் மருத்துவ விவரங்கள் உள்பட பல்வேறு தனிநபர் தரவுகளையும் ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் டிரம்ப் பொறுப்பேற்றதும் அமெரிக்காவில் அரசாங்க திறனுக்கான துறை ஒன்று உருவாக்கப்பட்டது. வரி செலுத்தும் மக்களின் பணம் பாதுகாக்கப்படவும், அமெரிக்காவின் கடனை குறைக்கவும், அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோக தடுப்புக்காகவும், அரசில் வீணடிப்பு மற்றும் மோசடி ஆகியவற்றை தடுக்கும் நோக்கத்திலும் இந்த துறை உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் டிரம்ப் அரசு புதிய மிகப்பெரிய வரி குறைப்பு மற்றும் மசோதா செனட் அவையில் தாக்கல் செய்தது செய்யப்பட்டது. இந்த மசோதா செலவை அதிகரிக்கும் என்றும், இது முட்டாள் தனமானது என்றும் எலான் மஸ்க் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அதனை தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர் அரசு நிர்வாக பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், டிரம்ப் அரசின் நிர்வாகத்திற்கு வலு சேர்க்கும் வகையிலான தீர்ப்பு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ளது.அந்த தீர்ப்பில் கூறியதாவது :அமெரிக்காவில் வசிக்கும் ஒவ்வொருவரின் பள்ளி பதிவுகள், வருவாய் விவரங்கள் மற்றும் மருத்துவ விவரங்கள் உள்பட பல்வேறு தனிநபர் தரவுகளையும் இந்த துறை ஆய்வு செய்யலாம் என தெரிவித்துள்ளது.

இதற்கு முன் தனியுரிமை , சமூக பாதுகாப்பு தொடர்புடைய விவரங்களை ஆய்வு செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்திருந்த நிலையில், அந்த தடை நீங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Supreme Court allows investigation of personal details of Americans


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->