துணிச்சல் காட்டிய மாணவிகள்…! சில்மிஷம் செய்த போதை நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைப்பு...! - Seithipunal
Seithipunal


சென்னை நகரின் தரமணி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இதழியல் படித்து வரும் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த மாணவி, அங்குள்ள கானகப் பகுதி விடுதியில் தங்கி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, தனது இரண்டு தோழிகளுடன் அருகிலுள்ள ஓட்டலுக்கு சென்று உணவருந்திய பின்னர், மூவரும் நடந்து விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில், மது போதையில் இருந்த ஒருவர் திடீரென அருகே வந்து மாணவியிடம் ஒழுங்கற்ற முறையில் கை வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியும், அவருடைய தோழிகளும் துணிச்சலுடன் எதிர்த்து, அந்த நபரை பிடித்து கடுமையாக தாக்கி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன் பின்னர் அவரை கோட்டூர்புரம் காவல் நிலையம் காவலர்களிடம் ஒப்படைத்தனர்.

மேலும், காவல் விசாரணையில், அவரது பெயர் காசி (58) என்பதும், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகிலுள்ள நெசல் கிராமத்தைச் சேர்ந்தவராக இருப்பதும் தெரியவந்தது.

கடந்த 40 ஆண்டுகளாக சென்னை நகரில் தங்கி கட்டுமானத் தொழிலாளியாக (கொத்தனார் வேலை) பணியாற்றி வந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது.

அவர்மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவலர்கள் காசியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Students showed courage drug addict who committed crime caught and handed over police station


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->