பேருந்து நிலையத்தை போர்களமாக்கிய மாணவிகள்.. சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்..! - Seithipunal
Seithipunal


மாணவிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்கள் வருங்கால இந்தியாவின் நம்பிக்கை நாயகர்கள் ஆனால் சில செயல்களால் அவர்கள் மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாகிறது . அப்படி ஒரு சம்பவம் சென்னையில் நிகழ்ந்தேறியுள்ளது.

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள அரசு கலை கல்லூரி மாணவிகளும் தொழிற்கல்வி மாணவிகளும் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தனர் அப்போது இருதரப்பு மாணவிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே இருதரப்பு மாணவிகளும் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

அங்கிருந்த மாணவிகள் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி மோதலுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது எனவும் அவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரவி வைரலாகியுளளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Student Fight with them self


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->