மாணவனின் உயிருக்கு எமனான படிகட்டு பயணம்.. கும்பகோணத்தில் நடந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


அரசு  பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த மாணவன் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், தேவமங்கலத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்.   இவர் கும்பகோணத்தில் உள்ள அரசு கலைகல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். வழக்கம் போல கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார்.

பேருந்தில் கூட்டமாக இருந்ததாக அவர் படியில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, கூட்டம் அதிகமாக இருந்ததால் எதிர்திசையில் பேருந்து சென்றது. எதிர்பாராத விதமாக அங்கு தொங்கி கொண்டிருந்த விளம்பர பலகையில் அவரின் புத்தகப்பை சிக்கி கொண்டது.

இதில், நிலைதடுமாறி விழுந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Student Death in Kumbakonam


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->