சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் சேவைகள்: முன்பதிவு நாளை தொடக்கம்..!
Special trains to operate on Independence Day holiday
வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக, கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் நான்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி வருகிற 14-ந்தேதி சென்னை சென்ட்ரல் - போத்தனூர் இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்று இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (06027) மறுநாள் காலை 08.30 மணிக்கு போத்தனூர் சென்றடைகிறது. மறுமார்க்கமாக 17-ந்தேதி இரவு 11.30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (06028) மறுநாள் காலை 08.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடைகிறது.
தொடர்ந்து, வருகிற 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் மங்களூரு சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து, திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்திற்கு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளது. அதன்படி அந்த தேதிகளில் மாலை 07.30 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (06041) மறுநாள் காலை 08 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடைகிறது. மறுமார்க்கமாக 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மாலை 05.15 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (06042) மறுநாள் காலை 06.30 மணிக்கு மங்களூரு சென்றடைகிறது.

அத்துடன், வருகிற 17-ந்தேதி நாகர்கோவில் - தாம்பரம் இடையே இயக்கப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில், அன்று இரவு 11.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (06012) மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் சென்றடையவுள்ளது. மறுமார்க்கமாக 18-ந்தேதி மதியம் 03.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (06011) மறுநாள் அதிகாலை 05.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, வருகிற 14-ந்தேதி சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அன்று இரவு 09.55 சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (06089) மறுநாள் காலை 11.30 மணிக்கு செங்கோட்டை சென்றடைகிறது. மறுமார்க்கமாக 17-ந்தேதி 17-ந்தேதி இரவு 07.45 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (06090) மறுநாள் காலை 09.05 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைகிறது.
இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (08.08.2025) காலை 08 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Special trains to operate on Independence Day holiday