கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட தந்தை.. ஆத்திரத்தில் மகன் செய்த விபரீத செயல்..! - Seithipunal
Seithipunal


பணத்தைக் திரும்பக் கேட்டபோது அவரை கத்தியால் குத்திய மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் முத்து இவருக்கு திருமணமாகி மாதப்பன் என்கின்ற மகன் இருக்கிறார். முத்து தனது மகனுக்கு இரண்டு லட்சம் பணம் கொடுத்து உதவியுள்ளார் முத்து தனது மகனிடம் பணத்தை திரும்ப கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மாதப்பன் தந்தையுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே மாதப்பன் தந்தை முத்துவை சிறிய கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Son arrested who attempt to kill his father


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->