திருச்சி விமான நிலையம்: செல்பி ஸ்டிக்கில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்.!! - Seithipunal
Seithipunal


திருச்சி விமான நிலையத்தில் செல்பி ஸ்டிக்கில் மறைத்து கடத்தி வந்த ரூ.28 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் போதை பொருள்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருவதை தடுப்பதற்காக சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை துபாயிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது ஆண் பயணி ஒருவரிடம் சந்தேகத்தின் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவரது உடமைகளை சோதனை செய்ததில், மொபைல் போன் செல்பி ஸ்டிக்கில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அவரிடம் இருந்த ரூபாய் 27 லட்சத்து 98,189 மதிப்புள்ள 53 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அந்தப் பையனிடம் தங்கம் கடத்தல் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

smuggled gold hidden in selfie sticks seized in Trichy airport


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->