தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.!
six IAS officers transfer in tamilnadu
தமிழ்நாடு அரசு சமீப காலமாகவே ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று 6 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின்படி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், சமூக நலத்துறை மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதாவது, நில நிர்வாகத்துறை ஆணையராக பதவி வகித்து வந்த எஸ். நாகராஜன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அத
* மனித வள மேலாண்மைத் துறை செயலாளர் பொறுப்பை நாகராஜன், கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* மீன்வளத்துறை ஆணையர், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வந்த கே எஸ் பழனிசாமி, நில நிர்வாகத்துறை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* மீன் வளத்துறை ஆணையராக சுஞ்சோங்கம் ஜாதக் சிருவும், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநராக ஆர்.செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
English Summary
six IAS officers transfer in tamilnadu