கொடூரன் சிவராமனின் தந்தை உயிரிழப்பு! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி, அங்கு வந்த 8-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் போலி பயிற்சியாளர் சிவராமன் கைது செய்யப்பட்டார்.

சிவராமன் போலீசிடம் இருந்து தப்ப முயன்றபோது அவர் வலது கால் முறிந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.

சிவராமனுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்து வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

இந்நிலையில், சிவராமனின் தந்தை அசோக்குமார் (61) காவேரிப்பட்டினம் நடேசா திருமண மண்டபம் அருகே மதுபோதையில் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.

தந்தை அசோக்குமார்(61) தலையில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sivaraman's father was killed


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->