சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து - மேலாளர் கைது
Sivakasi firecracker factory explosion Manager arrested
சிவகாசி பட்டாசு ஆலையின் மேலாளர் பிரபாகரன், போர்மேன் செல்வகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள பட்டாசு ஆலை உரிமையாளர் சீனிவாசனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகாசி என்றாலே அனைவருக்கும் பட்டாசு தான் ஞாபகம் வரும், அந்த வகையில் தற்போது சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை அதிகமாக உள்ளது,இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகை நேரங்களில் சிவகாசி பட்டாசுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக சிவகாசியில் அடிக்கடி வெடி விபத்துகள் நிகழ்வது வாடிக்கையாகிவிட்டது.அரசு அதனை தடுக்க பல்வேறு முயற்சி எடுத்தும் பலனில்லாமல் போய்விடுகிறது.தொடர்ந்து வெடி விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலியும் நடந்துகொண்டேய் செல்கிறது.இந்த விபத்துகளை தடுக்க பலரும் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.இந்தநிலையில் சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.
சிவகாசி அருகே நாரணாபுரம்-அனுப்பன்குளம் சாலையில் சீனிவாசன் மகன் கோபி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றும் வழக்கம்போல் பட்டாசு உற்பத்தி நடந்தபோது மாலை திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிவகாசி அருகே உள்ள பள்ளபட்டி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த கார்த்திகை செல்வம், சங்கீதா , லட்சுமிஆகியோர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.
மேலும் அப்பகுதியை சேர்ந்த மாரியம்மாள், நாகலட்சுமி ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெடி விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பட்டாசு ஆலையின் மேலாளர் பிரபாகரன், போர்மேன் செல்வகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள பட்டாசு ஆலை உரிமையாளர் சீனிவாசனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
English Summary
Sivakasi firecracker factory explosion Manager arrested