சிவகாசியில் பழிக்குப்பழி கொலை.! சிறுவர்கள் உட்பட 10 பேர்கொண்ட கும்பல் கைது.! - Seithipunal
Seithipunal


சிவகாசி அருகே இளைஞரை பழிக்குப்பழியாக கொலை செய்த வழக்கில், சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே நவநீத கிருஷ்ணன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அரவிந்த் கைது செய்யப்பட்டு. பின்னர் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

வெளியே வந்த அரவிந்த் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் அவரையும் அவரது நண்பரையும் அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக வெட்டியது. 

இதில் அரவிந்தன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், சிறுவர்கள் உட்பட 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

இதில் 3 பேர் மீது போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்து உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sivakasi aravinth murder case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->