"தாய்மைக்குக் குழந்தை பிறப்பு அவசியமில்லை": நடிகை வரலட்சுமி விளக்கம்!
actress Varalaxmi Sarathkumar say about baby
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான வரலட்சுமி சரத்குமார், கடந்த 2024 ஜூலை 2-ஆம் தேதி தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவை தாய்லாந்தில் மணம் முடித்தார். திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருக்கும் சூழலில், தாய்மை மற்றும் குழந்தைப்பேறு குறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்துகள் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
தாய்மை குறித்த வரலட்சுமியின் பார்வை: ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தால் மட்டுமே ஒரு பெண் தாய்மை அடைய முடியும் என்பதில் தமக்கு உடன்பாடில்லை.
தற்போதைய முடிவு: தற்போது குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணம் இல்லை; எதிர்காலத்தில் இந்த முடிவு மாறக்கூடும்.
ஏற்கனவே ஒரு தாய்: "நான் ஏற்கனவே என் தங்கை, நண்பர்கள் மற்றும் எனது வளர்ப்பு நாய்களுக்கு அம்மாவாகத்தான் இருக்கிறேன். இப்போது இன்னொரு குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் சூழலில் நான் இல்லை" என வெளிப்படையாகப் பேசினார்.
சிறந்த வளர்ப்பு (Parenting):
ஒரு பெண் குழந்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டாம் என எடுக்கும் முடிவு, ஒருவேளை அந்தச் சூழலில் அவர் குழந்தையை வளர்க்கத் தயாராக இல்லையெனில், அதுவே ஒரு சிறந்த 'பேரென்டிங்' முடிவாக இருக்கும் எனவும் அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.
சமூகத்தின் வழக்கமான எதிர்பார்ப்புகளைத் தாண்டி, ஒரு பெண்ணின் தனிப்பட்ட விருப்பமே முதன்மையானது என்பதை வரலட்சுமி மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார்.
English Summary
actress Varalaxmi Sarathkumar say about baby