ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு தீக்குளிக்க முயன்ற தாய் - மகள்! பின்னணியில் அதிர்ச்சி தகவல்.!  - Seithipunal
Seithipunal


சிவகங்கை, காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு மனைவி சரிதா. இவரது கணவர் உயிரிழந்த நிலையில் காரைக்குடி பகுதியில் நான்கு சக்கர வாகனத்தில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 

இந்நிலையில் இன்று காலை தனது மகன் மனோஜ் குமார் மற்றும் குணா ஆகிய இருவர் மீது காரைக்குடி போலீசார் பொய்யான வழக்குகளை பதிவு செய்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். 

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க சரிதா மகளுடன் சென்றிருந்தார். அப்போது திடீரென தனது கைப்பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து சரிதா அவர் மீதும் அவரது மகள் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். 

இதனை பார்த்த அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சரிதா மற்றும் அவரது மகள் மீது தண்ணீர் ஊற்றி தடுத்து நிறுத்தி, முதலுதவிக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இருவரையும் அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து போலீசார் தெரிவித்திருப்பதாவது, மனோஜ் குமார் மீது பல்வேறு குற்றவாளர்கள் நிறுவனத்தில் உள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். தாய் மகள் இருவரும் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sivaganga Mother daughter tried set fire collector office front


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->