பெயிண்டர் மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை... தேவகோட்டையில் பரபரப்பு.!
Sivaganga Devakottai Painter Shiva Murder by Strangers Police Investigation 29 June 2021
காதல் திருமணம் செய்துகொண்ட வாலிபர் கொலை செய்யப்பட்ட விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை சிறுவத்தி கிராமத்தை சார்ந்தவர் சிவா (வயது 32). இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 8 வருடத்திற்கு முன்னதாக, திவ்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் ஆவார்கள். இருவருக்கும் 7 வயதில் யுவப்பிரியன் என்ற மகனும், 4 வயதில் ஸ்ரீநயா என்ற மகளும் இருக்கின்றனர்.
சிவா தனது குடும்பத்துடன் சிறுவத்தி கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு சிவா தேவகோட்டையில் இருந்து சிறுவத்தி கிராமத்திற்கு வந்து கொண்டு இருந்துள்ளார். இதன்போது, சிவாவை இடைமறித்த மர்ம கும்பல், அவரிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டிச்சாய்த்து தப்பி சென்றுள்ளது. இரத்த வெள்ளத்தில் உயிருக்கு பயந்த சிவா, அங்குள்ள வயல் வெளியில் படுகாயத்துடன் ஓடியுள்ளார்.
சிவாவை கொலை செய்யும் திட்டத்துடன் வந்திருந்த கும்பல், அவரை துரத்தி சென்று கொலை செய்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. அப்பகுதியை சார்ந்த ஒருவர் வயல் வெளியில் மர்ம நபர் கொலை செய்யப்படுவதை கண்டு அதிர்ச்சியடைந்து ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்றதும் ஊராருக்கு பெரும் அதிர்ச்சியாக கொலையானது சிவா என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இந்த விஷயம் தொடர்பாக திருவேகம்பத்தூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், சிவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Sivaganga Devakottai Painter Shiva Murder by Strangers Police Investigation 29 June 2021