#சிதம்பரம் | கல்லூரி மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய தமிழக அரசு கல்லூரி பேராசிரியர்! தட்டிக்கேட்ட மாணவனுக்கு கத்திக்குத்து! - Seithipunal
Seithipunal



மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவிக்கு ஆபாச செய்தி அனுப்பிய பேராசிரியரை, தட்டிக் கேட்ட கல்லூரி மாணவனுக்கு கத்திக்குத்து சம்பவம் அரங்கேறி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே புத்தூர் பகுதியில் தமிழக அரசின் கலைக் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் ஒருவர், அதே கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு வாட்ஸ் அப் மூலம் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக சொல்லப்படுகிறது.

சம்பந்தப்பட்ட அந்த மாணவி இது குறித்து மாணவன் ஒருவரிடம் தெரிவித்துள்ளார். திலீப்குமார் என்ற அந்த மாணவன் நேரடியாக பேராசிரியர் இடம் "இதுபோல் இனி மெசேஜ்கள் அனுப்பாதீர்கள், உங்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிப்போம்' என்று எச்சரித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பேராசிரியர் கீழவள்ளம் கிராமத்தை சேர்ந்த அருள் அரசன் என்பவரின் உதவியை நாடியுள்ளார். சம்பவம் நடந்த இன்று அருள் அரசன், மாணவன் திலீப்குமார் வயிற்றில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி உள்ளார்.

படுகாயமடைந்த மாணவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sirkali Puttur Govt College professor WA msg


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->