காவல் அதிகாரி வில்சன் கொலை வழக்கில், பயங்கரவாதிகளுக்கு வாதாட வந்த வக்கீலை புலந்துகட்டிய மக்கள்..!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் வில்சன், இவர்   பட்ந்தாலுமூடு அருகே உள்ள சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து வந்த ஒரு காரை சோதனை செய்ய அவர் தடுத்து நிறுத்தினார். அப்போது அந்த காரில் இருந்து இறங்கிய மர்ம நபர் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை துப்பாக்கியால் 3  ரவுண்ட் சுட்டுள்ளனர்.

இதில் உதவி ஆய்வாளர் வில்சன் தலை மார்பு மற்றும் கால் பகுதியில் குண்டு பாய்ந்து வில்சன் மயங்கி விழுந்தார். துப்பாக்கி சுடும் சத்தத்தை கேட்ட பிற காவலர்கள் வருவதற்குள் காரில் வந்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். காயம் அடைந்த ஆய்வாளர் வில்சன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிர் இழந்தார். இந்த சம்பவம் இந்தியா முழுதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணையில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபர்கள் பயங்கரவாதிகள் என்ற தகவல் வெளியானது. 

இதனைத்தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் பயங்கரவாத இயக்கத்தினை சார்ந்த ஆதரவாளர்களை கைது செய்த நிலையில்., இந்த கொலை சம்பவத்திற்கு துப்பாக்கி சப்ளை செய்த நபரை பெங்களூரில் வைத்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணையில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், பயங்கரவாதிகள் ஆயுதத்தை கடத்த முயற்சித்த நேரத்தில் காவல் அதிகாரி வில்சன் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

இந்தியாவில் குடியரசு தினத்தன்று டெல்லி மற்றும் குஜராத் நகரில் தாக்குதல் நடத்த திட்டமும் தீட்டப்பட்டுள்ளது. இந்த விசயத்திற்கு சுமார் 17 பேர் அடங்கிய கும்பலுடன் பயங்கரவாதிகள் களமிறங்கியுள்ளதாகவும், மொத்த 17 பேரில் 5 பேர் தமிழகத்தை சார்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. காவல் அதிகாரி வில்சனை சுற்று கொலை செய்த அப்துல்சமீம் மற்றும் தவ்பீக் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். இவர்கள் இருவரையும் தற்போது கன்னியாகுமரிக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், இவர்களை கன்னியாகுமரிக்கு அழைத்து வந்து நீதிபதியின் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், தங்களின் இயக்கத்தை சார்ந்தவர்களை காவல் துறையினர் கைது செய்தால் இதனை போன்றே செய்வோம் என்று குற்றவாளிகள் பதில் அளித்துள்ளதாக தகவல் வெளியானது. 

இந்த நிலையில், குளித்தலை காவல் நிலையத்திற்கு இவர்கள் அழைத்துவரப்பட்ட சமயத்தில், பொதுமக்களும் பல வழக்கறிஞர்களும் கூடியிருந்தனர். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக யாரும் வாதாட செல்ல கூடாது என்று கூறி குமரி வழக்கறிஞர்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மூன்று வழக்கறிஞர்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக வாதாட சென்றதாகவும், இதனை அறிந்த பொதுமக்கள் மற்றும் சக வழக்கறிஞர்கள், பயங்கரவாதிக்கு ஆதரவாக வாதாட வந்த 3 வக்கீல்களை அடித்து நொறுக்க தொடங்கியுள்ளனர். அவர்களின் காரும் சேதப்படுத்தப்பட்டது. இதனையடுத்து நிலைமையை உணர்ந்து அவர்கள் அனைவரும் வந்தவழியாகவே திரும்பி சென்றுள்ளனர். மேலும், தற்போது கைதான இரண்டு பயங்கரவாதிகளின் மீதும் தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

si wilson murder case update


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->