#செங்கல்பட்டு: இளம் பெண் விவகாரத்தில் திடீர் திருப்பம்... காதலனை சிக்க வைக்க பாலியல் நாடகமாடியது அம்பலம்..!! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சைதாப்பேட்டையில் தங்கி டெலிகளாக தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் நேற்று இரவு செங்கல்பட்டில் உள்ள தனது தோழி பார்த்துவிட்டு சைதாப்பேட்டை செல்வதற்காக செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இரவு 10:30 மணி அளவில் காத்திருந்தபொழுது காரில் வந்த 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் அந்த பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

தன்னை காதலித்து வந்தவர் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் அவரை காவல்துறையில் சிக்க வைப்பதற்காக இத்தகைய நாடகமாடியதை ஒப்புக் கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sex drama exposed to trap lover in chengalpattu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->