செந்தில்பாலாஜியின் அமைச்சர் பதவியை பிடுங்கிறார் முதல்வர் ஸ்டாலின் - பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal



சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது கார்மீக ரீதியாக சரியானது இல்லை என்று, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

மேலும், செந்தில் பாலாஜியால் தமிழ்நாட்டுக்கு எந்த பயனும் இல்லை. அவரை அமைச்சராக நீடிக்க அனுமதி அனுமதித்திருப்பது அரசியல் சட்டத்துக்கும், தார்மீக அடிப்படையில் தவறானது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இலாகா இல்லாத அமைச்சராக இருப்பது கேலிக்குரியது என்றும், நல்லாட்சி, தூய்மையான நிர்வாகத்திற்கு இது உகந்ததல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவு எடுக்க முடியும் என்று, கூறி அவருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.

உயர் நீதிமன்றமே செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், விரைவில் அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்ற தகவல் கசிந்து உள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு குறித்து தமிழக அரசுக்கு கிடைத்தவுடன், முதலமைச்சர் மு க ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொள்வார் என்று தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthilbalaji minister posting CM New Plan


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->