நாகர்கோவில் : வீட்டில் மர்ம முறையில் உயிரிழந்து கிடந்த ஏழாம் வகுப்பு மாணவன் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி : வீட்டில் மர்ம முறையில் உயிரிழந்து கிடந்த ஏழாம் வகுப்பு மாணவன் - நடந்தது என்ன?

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மேலராமன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், மூத்த மகன் ஸ்டெபின் அதேபகுதியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, எட்டாம் வகுப்பு செல்வதற்காக இருந்தார். 

பள்ளி விடுமுறை என்பதால் பிள்ளைகள் இருவரும் வீட்டிலேயே இருந்துள்ளனர். இவர்களை வீட்டில் விட்டுவிட்டு பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் சென்றுள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு ஸ்டீபனும், அவரது மனைவியும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது இளைய மகன் மட்டும் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். 

மூத்தமகனைக் காணவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் வீட்டில் தேடியபோது ஸ்டெபினின் அறை உள்பக்கமாக பூட்டி இருந்தது. நீண்ட நேரமாகத் தட்டியும் திறக்காததால் ஸ்டீபன் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளார். அங்கு, சிறுவன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டபடி இருந்துள்ளார். 

இதைப்பார்த்து சிறுவனின் பெற்றோர் கதறி அழுத்துள்ளனர். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் போலீசார் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் இயல்பாக இருந்த மாணவன் திடீரென தற்கொலை செய்தது ஏன்? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student sucide in kanniyakumari police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->