திருவள்ளூர் || பேருந்து நிலையத்தில் சாராமாரியாக தாக்கி கொள்ளும் பள்ளி மாணவிகள்.! இதுதான் காரணமா? - Seithipunal
Seithipunal


தம்பியை காதலித்த ஆத்திரத்தில் பள்ளி மாணவியுடன் பேருந்து நிலையத்தில் முடியை இழுத்து அக்கா சண்டைபோட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நகரின் மையப்பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியும், அரசு உதவி பெறும் மேல் நிலைப்பள்ளியும் அருகருகே இயங்கி வருகின்றது. இந்த நிலையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரின் தம்பியை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் காதலித்து வந்துள்ளார். 

இது குறித்து தகவலறிந்த அந்த மாணவி, அரசுப்பள்ளி மாணவியை சந்தித்து  தனது தம்பியைக் காதலிப்பதை நிறுத்துமாறு கண்டித்துள்ளார். மேலும், சக தோழிகளுடன் சேர்ந்து பேருந்து நிலையத்தில் வைத்து அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியை தாக்கியுள்ளார். 

இருப்பினும், அந்த அரசு பள்ளி மாணவி, தன்னுடைய காதலைக் கைவிடாமல் இருந்து வந்துள்ளார். இதனால், இரு பள்ளி மாணவிகளும் நேற்று மாலை பள்ளி முடிந்தவுடன் பேருந்து நிலையத்தில், ஒருவருக்கொருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். பள்ளி மாணவிகள் ஒருவரையொருவர் தாங்கிக்கொள்ளும் இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

school student fight at bus stand in tiruvallur


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->