அரியலூர் : இரு சக்கர வாகனம் மோதி பத்தாம் வகுப்பு மாணவன் பலி.! - Seithipunal
Seithipunal


அரியலூர் : இரு சக்கர வாகனம் மோதி பத்தாம் வகுப்பு மாணவன் பலி.!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை அடுத்துள்ள சிறுநிலா பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் மகன் தரணீஷ் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு 10-ம் வகுப்பு செல்வதற்கு தயாராக இருந்து வந்தார். 

இந்த நிலையில் தரணீஷ் நேற்று மதியம் மொபட்டில் தண்ணீர் பிடிப்பதற்காக சிறுநிலா சாலையில் சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில், அதே பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக தரணீஷ் ஓட்டி சென்ற மொபட் மீது மோதியது. 

இதில் தரணீஷ் படுகாயம் அடைந்துளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தரணீஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும், தரணீஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி திறக்க உள்ள நிலையில் பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

school student died in ariyalur for bike accident


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->