தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு - உற்சாகத்தில் மாணவர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் ஏப்ரல் 23-ந் தேதி வரை அனைத்து மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித்தேர்வுகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல்  24-ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.

பொதுவாக பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்தில் கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந் தேதி வெளியாக இருந்ததால், 6-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து இருந்தது.

இதற்கிடையே கடும் கோடை வெயில் மற்றும் வெப்ப அலை காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளிப்போடுமாறு எழுந்த கோரிக்கைகளை அடுத்து, 10-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 

மேலும் இன்றைய தினமே மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட உள்ளன. இதனுடன் தமிழக அரசின் சார்பில் புத்தகப்பை, காலணி, மழைக்கோட்டு, சீருடைகள், வண்ண பென்சில் மற்றும் கிரையான்கள், ஜாமின்ட்ரி பாக்ஸ் உள்ளிட்டவையும் வழங்கப்பட உள்ளன. 

இதுமட்டுமல்லாமல், மாணவர்களுக்கு புதிய இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும் வரை ஏற்கனவே உள்ள பழைய அட்டையை பயன்படுத்தி கட்டணமின்றி அரசு பேருந்துகளில் சீருடையுடன் பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

school re open today in tamilnadu


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->