திருமண ஆசை காட்டி பள்ளி மாணவியை ஏமாற்றிய வாலிபர்.. மாணவி எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டம் சின்னமாட்டுக்கடை கிராமத்தைச் சேர்ந்தவர் ஷாலினி. இவர் சோலைக்கோட்டை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த போது தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மாணவி ஷாலினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழப்பதற்கு முன் மாணவி ஷாலினி அளித்த மரண வாக்குமூலத்தில், தான் முனிரத்தினம் என்பவரை காதலித்ததாகவும், அவர் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து உயிரிழந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

School girl suicide love failure in tharmapuri


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->