#BREAKING : சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து..ஒருவர் பலி.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கத்தாளம்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

சாத்தூர் அருகே கத்தாளம்பட்டியில் சிவகாசியை சேர்ந்த பெரியகருப்பன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் 50 க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் காலை நேரம் என்பதால் ரசாயன கலவை பணிக்காக 3 பேர் மட்டுமே வந்திருந்த நிலையில் தரைச் சக்கர பட்டாசு தயாரிக்க ரசாயனம் மூலப்பொருட்களை கலவை செய்யும் போது எதிர்பாராதவிதமாக உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் ரசாயன கலவை பணியில் ஈடுபட்டிருந்த சுந்தரகுடும்பன்பட்டியை சேர்ந்த சோலை விக்னேஷ் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் விபத்து குறித்து ஆலை உரிமையாளர் பெரியகருப்பன் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு உயிர் இழப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் நடைபெற்ற 7 பட்டாசு ஆலை விபத்துகளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sathur cracker factory fire one Death


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->