அரசியலில் ரீ என்ட்ரி தரும் சசிகலா ! நான் ஜாதி அரசியல் செய்யவில்லை!! - Seithipunal
Seithipunal


எம்ஜிஆர் போல்தான் ஜெயலலிதா என போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா கூறி உள்ளார்.

இன்று மாலை சசிகலா போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் தொண்டர்களை சந்தித்து பேசுகிறார். அதிமுகவை ஒன்றிணைப்பது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா பேசுகையில், எம்ஜிஆரை போல் தான் ஜெயலலிதாவும் திகழ்ந்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஜாதி பாகுபாடு எதையும் பார்த்ததில்லை. அதிமுகவில் சாதாரண தொண்டனும் தலைமை பதவிக்கு வர முடியும். 

தொடர்ந்து பேசிய சசிகலா, ஜாதி அரசியல் செய்திருந்தால் பெங்களூர் செல்லும் போது ஏன் இபிஎஸ்யை முதல்வர் ஆக்கினேன். அதிமுக மீது பொதுமக்களுக்கு தனி பிரியம் உள்ளது. தானும் கெட்டு கட்சியையும் கெடுக்க கூடாது என்பதுதான் எனது கோரிக்கை என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், சசிகலாவின் அழைப்பை ஏற்று இன்று மாலை நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் எத்தனை பேர் சசிக அளவில் சந்திக்க உள்ளார்கள் என்பது இன்று மாலை தான் தெரியும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sasikala reentry into politics


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->