பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற அம்பேத்கர் நகர் அன்பழகன் உள்ளிட்ட 3 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


ஓமலூர் அருகே கஞ்சா விற்ற கல்லூரி மாணவர்கள் உட்பட மூன்று பேரை போலீசார் அதிரடியாக இன்று கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கஞ்சா விற்பனை படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதுமே இந்த கஞ்சா விற்கும் கும்பலால் பல்வேறு குற்ற சம்பவங்களும் அரங்கேற தொடங்கியுள்ளது.

இதுமட்டுமல்லாமல் கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்த காரணத்திற்காக, தற்போது வரை மூன்று கொலைகள் தமிழகம் முழுவதும் அரங்கேறி உள்ளது. 

இதில் 2 பேர் அரசியல் பிரமுகர்கள் ஆவார்கள். ஒருவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகி, மற்றும் ஒருவர்  இஸ்லாமிய கட்சியை சேர்ந்த ஒருவர்.

இந்த நிலையில், சேலத்தில் கல்லூரி மாணவர்களை கஞ்சா விற்று இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் ஓமலூர் பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்று வந்த இரண்டு மாணவர்கள் உட்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கேரளாவை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் வினோத் மற்றும் ஒரு மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சேலம் மாவட்டம் ஓமலூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த அன்பழகன் என்பவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SALEM GANJA CASE 3 Culprits arrested


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->