சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமனம்..! - Seithipunal
Seithipunal


சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் மியாமிக்கப்பட்டுள்ளார்.

1962ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவையில் பிறந்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், பள்ளி மற்றும் சட்டப்படிப்பை சென்னையில் முடித்தார். இதைத் தொடர்ந்து 1986ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கறிஞர் தொழிலை தொடங்கிய இவர், அக்டோபர் 25, 2013ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்று ஏப்ரல் 14, 2015ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 8 மாதங்களாக பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த டி.ராஜா இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் 2வது மூத்த நீதிபதியான எஸ். வைத்தியநாதனை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். இவர் நாளை (மே 25ம் தேதி) முதல் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணிகளை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

S Vaithyanathan appointed as Chief Justice of Madras High Court


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->