பட்டாசு வெடி விபத்து; ஆலை சார்பில் தலா ரூ.5.5 லட்சம் நிவாரணம்!!
Rs5 lakh 50 thousand relief fund to Sivakasi fireaccident
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் செயல்பட்டு வந்த பட்டாசாலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் ஆறு பெண்கள் உட்பட 10 பேர் பலியாகி உள்ளனர். இந்த வெடி வெடிபூத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் சரவணன், போர்மேன் மற்றும் மேலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
![](https://img.seithipunal.com/media/Sivakasi Railway Station.jpg)
இந்த நிலையில் பட்டா சாலையில் மேலாளர் மற்றும் போர்மேனை தணிப்படை போலீசார் கைது செய்த நிலையில் ஆலையின் உரிமையாளர் சரவணன் போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கும் ஆலை உரிமையாளர் சார்பில் தலா ரூ.5 லட்சம் காசோலையும், தலா ரூ.50,000 நிதியும் வழங்கப்பட்டு உள்ளது. உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக இத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
English Summary
Rs5 lakh 50 thousand relief fund to Sivakasi fireaccident